Tamil

20ஆவது ஆண்டாக கதிர்காமம் கிரி வெஹெர & ருஹுணு மகா கதிர்காம தேவலாயாத்தை ஒளிரச் செய்யும் சுதேசி கோஹோம்ப

இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு கதிர்காம மகா தேவலாயத்தின், 2021 எசலா திருவிழாக்களுக்கு, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யின், முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரினால் ஒளிரூட்டப்படுகின்றது. “சுதேசி கோஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ் இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. அது மாத்திரமன்றி சுதேசி இவ்வருத்தில் மூன்றாவது முறையாக கதிர்காமம், “செல்லா கதிர்காமம்” தேவலாயாத்தின் மிக முக்கியமான மூன்று இடங்களில் ஒன்றையும் ஒளியூட்டியது.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வுகள் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகி, 2021 ஜூலை 23 ஆம் திகதி நிறைவடைகின்றன. மேலும் சுதேசி தொடர்ந்து 20ஆவது ஆண்டாக ஆலோக பூஜாவாவுக்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் சுதேசி நிறுவனத்தின் தலைவர் திருமதி அமாரி விஜேவர்தன தெரிவிக்கையில், இவ்வருடமும் ‘ஆலோக பூஜா’ போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், முற்றிலும் இலங்கை நிறுவனம் எனும் வகையில், இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய பாரம்பரியத்தை பாதுகாப்பதை நாம் கடமையாக கருதுகிறோம்.

சுதேசி நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களையும், அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஊட்டுவதையும் மேற்கொண்டு வருகின்றது என அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒளியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து கண்கவர் கலாசார போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது, இது இலங்கையின் மரபுகள் மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது.

மகாவம்சத்தின்படி, கிரி வெஹெர ஆனது, மகாநாக மன்னனால் கட்டப்பட்டுள்ளது. புத்த பகவான் இலங்கைக்கான தனது மூன்றாவது விஜயத்தின் போது தர்மத்தை போதிப்பதற்காக கதிர்காமம் கிஹிரி உயனாவிற்கு சென்றதன் நினைவாக இது கட்டப்பட்டுள்ளதாக அது குறிப்பிடுகின்றது.

இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சபதத்தின் நிறைவேற்றமாக, கதிர்காம தேவாலாயமானது, துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்டது. கதிர்காம தெய்வம் இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு இன மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களால் வணங்கப்படுகின்றது.

புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ளதும் பண்டைய சுவரோவியங்கள் பேணப்படுகின்றதுமான, வரலாற்று சிறப்புமிக்க தம்பதெனிய ரஜ மகா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ சுதேசி நிறுவனத் தலைவர் திருமதி அமாரி விஜேவர்தனேவினால், கடந்த கால மகிமையை மீண்டும் கொண்டுவரும் எனும் வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

திருமதி அமாரி விஜேவர்தன ஹெலன விஜேவர்தன லமாதெனியின் பேத்தி ஆவார். ஹெலன விஜேவர்தன, 1927 ஆம் ஆண்டில் களனி ராஜ மகா விஹாரையின் புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.

தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலய, அலுத் நுவர தெடிமுண்ட தேவாலாயம், கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மகா சமன் தேவலயம், ரெதிகம ரிதி விஹாரை, தெரணியகல சமன் தேவாலயம், அம்மதுவ குடா கதரகம தேவலாயம், தம்பதெனிய ரஜா மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கோஹோம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. மத தலங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு கை கழுவும் தொகுதிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள், கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் குழந்தைகளை இலக்காகக் கொண்ட வீடியோ மூலமான கை கழுவுதல் படிமுறைகள், வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தொட்டிகளை நன்கொடை செய்தல், கோஹோம் பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் மற்றும் சிறந்த நற்குணங்களை எடுத்துரைக்கும் “ஹொந்த புருது” (சிறந்த பழக்க வழக்கங்கள்) எனும் புத்தகத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடி மற்றும் சந்தையின் முன்னணி நிறுவனமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் சுதேசி கோஹோம்ப ராணி சந்தனம், சுதேசி கோஹோம்ப பேபி, லிட்டில் இளவரசி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், லேடி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் சுதேசி பொடி வொஷ் & ஷவர் ஜெல் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசியின் தயாரிப்புகள் அனைத்து தயாரிப்புகளும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. இது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்து முன்னுரிமையளிக்கிறது. அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.

சுதேசி சிறந்த மூலிகை சவர்க்கார தரக்குறியீடான  ஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தனத்தை தயாரித்து விற்பனை செய்கிறது.

 

புகைப்படம்:

சுதேசியின் தலைவர் திருமதி அமாரி விஜேவர்தன, பிரதித் தலைவர் / சுதேசி நிர்வாக பணிப்பாளர் திருமதி சூலோதரா சமரசிங்க, கதிரகாமத்தில் உள்ள கிரிவெஹர ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கோபவக்க தம்மிந்த தேரர், ருஹுணு மகா விஹாரையின் பஸ்நாயக்க நிலேமே திஷான் குணசேகர, செல்லக் கதிர்காமம் மஹாசென் ரஜ மகா விகாரையின் விகாராதிபதி,  வணக்கத்திற்குரிய படவுகம ஜினானந்த தேரர் மற்றும் சுதேசி நிறுவன அதிகாரிகள்

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *